×

தீவிரவாதிகள் தாக்குதல் 37 பேர் பலி

மைதுகுரி: நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலியாகினர். நைஜீரிய அரசுக்கு எதிராக போகோஹராம் தீவிரவாத இயக்கமும், பல்வேறு ஆயுத குழுக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை யோபே மாநிலம் கெய்டாம் மாவட்டம் குரகயேயா கிராமத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சுட்டதில் 17 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஊர்வலம் சென்றபோது தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

The post தீவிரவாதிகள் தாக்குதல் 37 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Maiduguri ,Nigeria ,Boko Haram ,government ,Dinakaran ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்